Header Ads



'சிறையில் உள்ள எனக்கு கடிதம் அனுப்புங்கள்' - மக்களிடம் ரஞ்சன் கோரிக்கை (விலாசம் இணைப்பு)


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) மக்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதன்படி, முடிந்தால் எனக்கு கடிதங்களை அனுப்புங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தகைய கடிதங்கள் அனைத்தையும் தான் வாசிப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறுகிறார்.

முடிந்தவரை சமூக ஊடகங்களில் இடுகையிடுமாறும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடச் சென்ற போது, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக வெலிகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம இதை குறிப்பிட்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அஞ்சல் முகவரி:


ரஞ்சன் ராமநாயக்க

Y பிரிவு

அங்குனகோலபெலஸ்ஸா.

இலங்கை சிறை


No comments

Powered by Blogger.