Header Ads



மீண்டும் மன்னிப்பு கோரியது பேஸ்புக் - ஒரு வாரத்தில் 2 வது முறையாக செயலிழப்பு


ஒருவாரக் காலப்பகுதியில் இரண்டு முறை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்தமைக்கு பேஸ்புக் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தடையைப் போல, நேற்றைய தினமும் இரண்டு மணிநேர செயலிழப்பு ஏற்பட்டது.

இதனால், பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளும் பாதிக்கப்பட்டன.

எனினும் இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், சேவைகள் வழமைக்கு திரும்பியதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்கள் செயலிழந்தன. 

இதனால் உலகளவில் சுமார் 3.5 பில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.