Header Ads



UNP யின் முக்கிய உறுப்பினர்கள், காரியாலயத்திற்கு வந்து அச்சுறுத்தல் விடுத்தனர் - வடிவேல் சுரேஷ்


தமது வரப்பிரசாதம் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அண்மையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான, சாகல ரத்நாயக்க, ருவான் விஜேவர்தன, நவீன் திஸாநாயக்க மற்றும் ஆர்.யோகராஜன் ஆகியோர் தங்களின் உதவியாளர்களுடன் பிரவேசித்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைக் காரியாலய உத்தியோகத்தர்களை அச்சுறுத்தித் தாக்கியதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.