பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, கொம்பு முளைத்துள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவுக்கு ஓணானின் கழுத்தில் தங்கத்தை கட்டியது போல் கொம்பு முளைத்துள்ளது என தெரிவித்த மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, அவர் தன் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கவலையடைவதாகத் தெரிவித்தார்.
தனது தனிப்பட்ட விடயங்களில், அமைச்சர் காமினி லொக்குகே தலையிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் என்ற ரீதியில் தான் எவரையும் குற்றம்சுமத்தமாட்டேன் என தெரிவித்த அவர், ஜகத் குமாரவின் குற்றச்சாட்டு தொடர்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் ஒன்றாக இருந்து பதிலளிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
Post a Comment