Header Ads



குடை ஏற்படுத்திய குழப்பம் - 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி


குடையொன்று மோதியதால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி கொண்டுச் சென்ற குடை, தனது உடலின் மோதியதாக கோபமடைந்த அம்பியுலன்ஸ் சாரதி திட்டியதால், தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் மற்றும் அம்பியுலன்ஸ் சாரதி ஆகியோர் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.