Dr சுதர்சினியை சுகாதார அமைச்சராக்குமாறு, எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை
அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளநிலையில் சுதர்சினிபெர்ணான்டோ புள்ளேயை சுகாதார அமைச்சராக நியமிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்தவேண்டும் என்றால் சுதர்சினிபெர்ணான்டோ புள்ளேயை சுகாதார அமைச்சராக நியமிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று நிலைமையை கையாள்வதற்கு திறமையும் அறிவும் சுதர்சிணி பெர்ணாணடோபுள்ளேவிடம் இருப்பதாக நளின்பண்டார தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கவேண்டும் கொவிட் செயலணியை கட்டுப்படுத்தும் அதிகாரம் மருத்துவநிபுணர்களிற்கு வழங்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் அமைச்சரவை மாற்றங்களை மேற்கொள்வதில் அர்த்தமில்லை எனவும் நளின்பண்டார தெரிவித்துள்ளார். Thinakkural
Post a Comment