Header Ads



உரை பையினுள் இருந்து பெண்ணின் சடலம் - சித்தி லைலா என்று அடையாளங் காணப்பட்டுள்ளார்.


வாழைச்சேனைப்பொலிஸ் பிரிவில் நேற்று (05) இரவு பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். 

வாழைச்சேனைப் பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில், உரை பையில் கட்டப்பட்ட பார்சலை, ஒருவர் கொண்டு வந்து வைத்து விட்டு பத்து நிமிடத்தில் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுச்சென்றவர், வராத காரணத்தினால் வர்த்தக நிலைய உரிமையாளர், சந்தேக நபருக்க தொலைபேசி அழைப்பை விடுத்த போது அதை வைத்துக் கொள்ளுங்கள் நான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

குறித்த பொதி தொடர்பில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸ் நிலையம் சென்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரும் வர்த்தக நிலைய உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொலை செய்யப்பட்ட குடும்பப்பெண் வாழைச்சேனை, அல்லாப்பிச்சை வீதியைச் சேர்ந்த முகம்மட் ஹனீபா சித்தி லைலா என்று அடையாளங் காணப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

No comments

Powered by Blogger.