மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புக்காக, சுய முடக்கத்தில் ஈடுபடவேண்டும் - அனுரகுமார
நிபுணர்களின் கருத்துக்கு செவிசாய்க்காத அரசாங்கத்திடம் முடக்கத்தை அமுல்படுத்துமாறு முறையிடுவது முட்டாள்தனமானது என்று கூறிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புக்காக சுய முடக்கத்தில் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இன்று -15- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் ஏனென்றால் அவர்களின் உயிர் எனையும் விடப் பெரிது என்பதை உணரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment