Header Ads



ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும், மத்ரஸாக்களிலும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் ஆரம்பிக்கப்படுமா..?


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கொவிட் 19 வைரஸ் தொற்றும், தொற்றுக் காரணமாக மரண வீதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் அடிப்படைவசதிகளுடன் கூடிய மத்ரஸா கல்லூரி விடுதிகளை கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றுவது தொடர்பில் வக்பு சபை ஆலோசித்து வருகிறது என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார். இது தொடர்பான மத்ரஸாக்களின் விபரங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக பெறப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அடிப்­படை வச­தி­க­ளுடன் கூடிய மத்­ரஸா விடு­தி­களில் கட்­டில்கள், கழிப்­பறை வச­திகள் மற்றும் போதி­ய­ளவு இட வசதி இருப்­பதால் அவற்றை கொவிட் 19 சிகிச்சை நிலை­ய­மாக மாற்­று­வதில் சிர­மங்கள் ஏற்­ப­டாது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் தெரி­விக்­கையில், ‘நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­தோரே அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். மரண வீதமும் அதி­க­ரித்­துள்­ளது. நாட்டில் வைரஸ் தொற்று நோயா­ளர்­களை அனு­ம­திப்­ப­தற்கு வைத்­தி­ய­சா­லை­களில் போதிய இட­மு­மில்லை. இதனால் நாளாந்தம் அநேகர் வீடு­களில் மர­ணிக்­கி­றார்கள். இந்­நி­லை­யினை கருத்திற் கொண்டே வக்பு சபை மத்­ரஸா விடு­தி­களை கொவிட் 19 சிகிச்சை நிலை­ய­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்கு ஆலோ­சித்து வரு­கி­றது.

தற்­போது மத்­ர­ஸாக்கள் மூடப்­பட்­டுள்­ளதால் இதனால் சிர­மங்கள் எதுவும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. அத்­தோடு ஒரு சில பள்­ளி­வா­சல்­க­ளிலும் கொவிட் 19 சிகிச்சை நிலை­யங்­களை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் அறிய முடி­கி­றது.

இதே­வேளை ‘கொவிட் 19 தொற்று நோயினால் பாதிக்­கப்­படும் நோயா­ளர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வாகம் பள்­ளி­வாசல் வளா­கத்தில் கொவிட் 19 சிகிச்சை மத்­திய நிலை­ய­மொன்­றினை அமைப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

நாட்டின் வேறு சில மாவட்டங்களிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் இவ்வாறான கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையங்களை ஆரம்பிப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

2 comments:

  1. ஏன் பாடசாலைகளில் இடமில்லை?

    ReplyDelete
  2. இவ்வாரான கலந்துரையாடல்கள் உலமா சபையினுாடாகவே நடைபெரவேண்டும் மாற்றமாக அரச நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள வகுபுசபையை அரசியல் வாதிகள் அரசியல்லாபங்களுக்காக பயன்படுத்த வாய்பாக அமையக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.