தடுப்பூசி ஏற்றுவதில் முஸ்லிம்கள், பங்களிப்புச் செய்ய வேண்டும் - கொள்ளுப்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி சுமித் குனரத்ன
- Ameen Nm -
கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களில் தடுப்பூசிகளை ஏற்றியவர்கள் ஒரு சதவீதத்தினரே என கொள்ளுபிடிய பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி சுமித் குனரத்ன இன்று -20- கொள்ளுபிடி பள்ளிவாசலில இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.சகலரும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியே அவர் இதனைத் தெரிவித்தார்.விசேடமாக முஸ்லிம்களுக்கே இந்த வேண்டுகோளை விடுத்தார்.இது குறித்து முஸ்லிம் சமுகம் கவனத்திலெடுப்பது அத்தியாவசியமானது.இந்த நாட்டின் அபிவிருத்திக்காக முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்வது போன்று தடுப்பூசி ஏற்றுவதிலும் முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்ய வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Post a Comment