கொரோனா நிதியை தனியாக சேகரிக்கும் மைத்திரி - தனி வழி செல்கிறாரா..?
நிதியத்துக்கான நிதியை திரட்டும் திட்டம், கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், கட்சியின் தலைமையத்தின் இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.
ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையை மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஏனையோர், தங்களுடைய காசோலைகளை கட்சியின் பொருளாளர் லசந்த அழ கியவண்ணவிடம் வழங்கினர்.
இதுதொடர்பில் வங்கிக் கணக்கும் திறக்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கி சுதுவெல்ல கிளையிலேயே 143100150009171 எனும் கணக்கிலக்கத்தில் அந்தக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கிளை சங்க உறுப்பினர்கள் இந்த நிதிக்கு முடிந்தவரை பங்களிப்பு செய்யுமாறு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்போது அந்த கஷ்டப்பட்டு உழைத்த 'பங்கை' முழுமையாக எடுத்துக் கொள்ளலாம்.
ReplyDelete