தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் வௌவால்களுக்கானது - சமன் ரத்னபிரிய
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு சட்டத்தால் எந்தவிதமானப் பயனும் இல்லை என இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையின் தொழிற்சங்கங்கள் வீதிக்கு இறங்கி போராடி, நாடு முழுவதையும் முடக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துமெனவும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய பொதுமுடக்கத்துக்கு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளது. தற்போது அரசாங்கம் இரவில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இரவில் பொதுமக்கள் நடமாடுவதில்லை. எனவே இந்த ஊரடங்குச் சட்டம் வௌவால்களுக்கானது எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment