Header Ads



ஹிஷாலினிக்கு நீதி கிடைக்கட்டும், றிசாத்திற்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் நிறுத்தப்படட்டும் - ACMC எப்போது வீதிக்கு இறங்கும்..?


- A.L.Thavam -

ACMC யும், நடுநிலையாக சிந்திக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளும் - ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக இனியும் மௌனம் காக்கக்கூடாது. 

ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான விசாரணை வேண்டி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், ஊடக மாநாடுகள், நேர்முக வர்ணனைகள் என எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம்.

இனி, ACMCயினதும், நடுநிலையாக சிந்திக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளினதும் Turn. 

அதேபாணியிலான கவனயீர்ப்பு போராட்டங்கள், ஊடக மாநாடுகள், நேர்முக வர்ணனைகளை ACMCயினரும் புத்திஜீவிகளும் செய்ய வேண்டும். 

✅ அவை சகோ. றிசாட் பதியூதீனை வைத்து அரசியல் செய்வதற்கு எதிரானவையாக அமைய வேண்டும்.

✅ அதிகார வர்க்கத்தின் தலையீடற்ற சுதந்திர விசாரணையை அவை கோர வேண்டும்.

✅ அவை ஹிஷாலினியின் மரண வாக்குமூலத்தை வெளியிடக்கோருவதாக அமைய வேண்டும்.

✅ அவை ஹிஷாலினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால் - எங்கு நடந்தது என்பதை அறிய - 12 வயது முதல் அவர் வேலை செய்த - அனைத்து வீட்டுக்காரர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டியதை வலியுறுத்த வேண்டும்.

✅ அவை 12 வயதிலிருந்து ஹிஷாலினியை வேலைக்கனுப்பிய - தாய் தந்தையர்  கைதுசெய்யப்பட்டு - தண்டனை வழங்கப்படுவதற்கான அழுத்தமாக அமைய வேண்டும்.

✅ அவை அதிகார வர்க்கத்தின் ஊதுகுழலாக செயற்பட்டு - வெறும் ஊகங்களை மாத்திரம் செய்தியாக வெளியிடும் - ஊடகங்களுக்கு எதிரானவையாக அமைய வேண்டும்.

✅ அவை இனவாதத்தை கட்டவிழ்த்துவிடும் - கைக்கூலிகளின் கருத்துக்களுக்கு எதிரான - சட்ட நடவடிக்கைகளை வேண்டுவதாக அமைய வேண்டும்.

இப்படிச் செய்வதினூடாகவே றிசாட் பதியூதீனுக்கு எதிராக - அரசியல் நோக்கில் பயன்படுத்தப்படும் ஹிஷானியின் மரணத்தின் மீதான உண்மையை வெளிக்கொணரலாம். கொலைக்குற்றவாளியாக அல்லது உடந்தையானவராக காட்டப்படுவதிலிருந்து றிசாட் பதியூதீனை ஓரளவிற்காயினும் காப்பாற்றலாம்.

15 வயதான சிறுமியை - இணையத்தளத்தில் தனியான பக்கம் திறந்து - விபச்சாரத்திற்கு விற்ற சம்பவத்தில் - ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் ஈடுபாடும் பின்னணியும் இருந்த காரணத்தினால் - அவை மூடிமறைக்கப்பட்டு - அதன் விசாரணைகள் தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் தொலைந்துபோயுள்ளன.

ஆனால், மரண வாக்குமூலத்தில் தானே தீயிட்டுக்கொண்டதாக கூறியுள்ள ஹிஷாலினியின் மரணம் - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத பிரச்சாரமாக முன்னெடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

ஹிஷாலினிக்கு நீதி கிடைக்கட்டும்!

றிசாட் மதியூதீனுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரங்கள் நிறுத்தப்படட்டும்!

இனவாதத்தின் சிறகுகளும் உடைக்கப்படட்டும்!

எப்போது தொடங்குவர் ACMCயினர்?....

5 comments:

  1. I AGREE WITH YOU THAT NEWS CHANNELS,SOCIAL MEDIAS ARE GIVING TOO MUCH OF IMPORTANT TO THE NEWS OF THIS GIRL.HOW EVER RISHARD LOST HIS HEAD AND BEHAVED LIKE MUSLIM PRABAKARAN WHEN HE WAS A CABINET MINISTER DURING THE WAR PERIOD.REMEMBER THE WAY HE ACTED AGAINST TAMIL MAGISTRATE IN MANNAR.AGAIN HE JOINED WITH THEN ARMY COMMANDER IN JAFFNA REMOVED ALL SCARB IRON FROM K.K.S CEMENT FACTORY AND SOLD SAME TO INDIAN MERCHANTS AND MADE MILLIONS OF MONEY.COLLECTED LOT OF MONEY FROM TAMILS HELD IN CHEDDIKUALM AND OTHER DETENTION CENTERS TO GET THEM RELEASED.FROM WHERE DID HE GET MONEY TO BUY HOUSES IN COLOMBO-07.ALL WHAT IS HAPPINING AGAINST HIM IS GOD,S CURSE AND RETRIBUTION.

    ReplyDelete
  2. திட்டமிடப்பட்ட சூழ்ச்சி சர்வ சாதாரணமானவை அல்ல இது சர்வதேச சதிகார அதிகார கும்பலுடனான அரச பயங்கரவாதம். இதை சாதாரண இலங்கை நீதிமன்றத்தினால் சாதிக்க முடியாது. முதலில் சர்வதேச முஸ்லிம் விரோதிகளை முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. திட்டமிடப்பட்ட சூழ்ச்சி சர்வ சாதாரணமானவை அல்ல இது சர்வதேச சதிகார அதிகார கும்பலுடனான அரச பயங்கரவாதம். இதை சாதாரண இலங்கை நீதிமன்றத்தினால் சாதிக்க முடியாது. முதலில் சர்வதேச முஸ்லிம் விரோதிகளை முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. மிகவும் பெறுமதியான விளக்கம்

    ReplyDelete
  5. Ean MUSLIMKAL ELLORUM NEETHIKKAKA VEETHIYIL IRANKA MUDIYATHAA?

    ReplyDelete

Powered by Blogger.