Header Ads



மரிக்கார் முன்மொழிய, கபீர் வழிமொழிய, இறுதியுரையினை முஜிபூர் நிகழ்த்துகின்றார் - இது ஏனென சிந்தித்துப்பார்க்கின்றேன்


ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீயிட்டு கொல்லப்பட்ட சிறுமி குறித்து எதிர்க்கட்சி எதனையும் கூறவில்லை ஏன்? ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா?  என அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் தாக்குதலுக்கு துணை நின்ற சக்திகளே இன்று உதய கம்மன்பிலவிற்கு எதிரான ஆரம்ப உறையும் இறுதி உறையும் நிகழ்த்துகின்றனர்.

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை முன்மொழிந்தது மரிக்கார் எம்.பி, கபீர் ஹசீம் வழிமொழிந்தார், இறுதி உரையினை முஜிபூர் ரஹ்மான் எம்.பி நிகழ்த்துகின்றார். இது ஏனென சிந்தித்துப்பார்க்கின்றேன். 

ஈஸ்டர் தாக்குதலுக்கு கடுமையாக கண்டனத்தை வெளிப்படுத்திய உதய கம்மன்பிலவிற்கு எதிராக இப்போது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக கூறி ஈஸ்டர் தாக்குதலுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. வீரகேசரி

2 comments:

Powered by Blogger.