Header Ads



சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் கடமையை செய்துள்ளோம், அறிவுகெட்ட அமைச்சர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் - மனோ


மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய எம்பீக்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய் பேசும் ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க கட்சி அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?

சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம்.  தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்; (1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு  (2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும் நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி (4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள் (6)சிங்கள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், "சிறுமி ஹிஷாலினி" விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது என்பதை கூப்பாடு போடும் அரசாங்க அரசியல்வாதிகள் உணரவேண்டும்.

இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

இவ்விவகாரம் பற்றி தமுகூ தலைவர் மனோ எம்பி மேலும் கூறியதாவது,  

இன்று தோட்டத்தொழிலாளர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது வருமானம் எமது நல்லாட்சியின் 2019ம் ஆண்டை விட, இன்று வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம், ஒருபுறம், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டு இந்த அரசாங்கம், வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு  உயர்ந்து விட்டது.

சிறுமி ஹிஷாலினி உட்பட, தோட்டத்தொழிலாளர்களின், பிள்ளைகள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வந்து ஆபத்தில் விழுவதற்கு பெருந்தோட்டத்துறையில் இன்று நிலவும் அதிமோச வறுமைதான் காரணம். இந்த அதிமோச வறுமைக்கு காரணம் என்ன? இந்த அரசாங்கத்தின்  தோட்டத்தொழிலாளர் தொடர்பான அக்கறையின்மை, அரசில் இருக்கின்ற இதொகாவின் மௌனம் ஆகியவையே பிரதான காரணங்கள் என்பதை, இன்று சிறுமி ஹிஷாலினி பற்றி பொய்யாக கூப்பாடு போடும் எம்பி டிலான் பெரேரா, அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, எம்பி முஹமட் முசாம்பில் போன்றவர்கள் உணர வேண்டும்.

சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் என் கடமையை சிறப்பாக செய்துள்ளோம்.  தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம்; (1)பொரளை நிலையை பொலிஸ் விசாரணை ஆய்வு  (2)பொலிஸ் தலைமையக விசாரணை மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் ஆய்வு (3)பாராளுமன்றத்தில் உரை மற்றும் நேரடியாக பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி (4)மலையகத்தில் நேரடி ஆர்ப்பாட்டங்கள் (5)சிங்கள மொழி ஊடக மாநாடுகள் (6)சிங்கள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் ஆகியவற்றை செய்த பின்னர்தான், "சிறுமி ஹிஷாலினி" விவகாரம் தேசிய அரங்கில் சூடு பிடித்தது. 

இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

“இந்த பிரச்சினை தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. இது ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை” என கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் இலங்கை பாராளுமன்றத்தில், மிக நிதானமாகவும்,  மிக பொறுப்புடனும் தெளிவாக பலமுறை எடுத்து கூறி விட்டேன். 

ஹிஷாலினி வீட்டுக்கு சென்று மௌன அஞ்சலி செலுத்தியதை தவிர, அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இதொகா, இந்த பிரச்சினை பற்றி கூறும்படியாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. எதுவாயினும், இப்போது விசாரணை நடக்கின்றது. அதற்கு அனைவரும் கண்காணிப்புடன் கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.  

இந்நிலையில், எம்மை பற்றி கூசாமல் பொய் பேசி குறை கூறும், ஸ்ரீல சுதந்திர கட்சி எம்பி டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சி எம்பி முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?

நாம் எமது ஆட்சியில் துண்டு விழும் மேலதிக 50/= ரூபாவை தர தவறிவிட்டோம் என குற்றம் சாட்டிய இவர்கள்  தோட்டத்தொழிலாளருக்கு இவர்களின் ஆட்சியில் இன்று என்ன செய்துள்ளார்கள்?  

ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறோம்,  என்று கூறிவிட்டு, வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, இந்த அரசாங்கம் சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு  உயர்ந்து விட்டது. ஆகவே பத்து நாள் வேலையும், குறைந்த வருமானமும் தோட்ட தொழிலாளரை வாட்டுகிறது. வறுமை பெருந்தோட்ட துறையில் தாண்டவமாடுகிறது.  

இதுவே இன்று  சிறுமி ஹிஷாலினி உட்பட கணிசமான பெருந்தோட்ட துறை பிள்ளைகள், பெண்கள், ஆண்கள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வர பிரதான காரணம்.

வறுமை எல்லோருக்கும் பொதுவானதுதான். அதனால்தான், இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் தொழில் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று சொல்லொணா துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். இப்படிதான், மூதூரை சேர்ந்த ஏழை முஸ்லிம் சிறுமி றிசானா நபீக், சவுதி அராபியா சென்று அங்கே கொல்லபட்டார்.

ஆனால் பெருந்தோட்டதுறையில், இன்று ஏற்பட்டுள்ள நிலைமை, 70 களில் அன்றைய சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சிக்கால நிலைமையை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பதை இந்த அறிவு கெட்ட அமைச்சர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். எதிரணியில் இருக்கும் எம்மை பொய்யாக குறை கூறுவதை விட்டு, இவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் ஆவன செய்ய வேண்டும்.      

5 comments:

  1. நன்றி மனோ, இப்பிரச்சினையை இனவாதமாக திசைதிருப்ப விடாமல் சட்ட நடவடிக்கைக்கான குரலாக முன்னெடுத்துச் சென்ற சீர்மைக்காக உங்களை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  2. தோட்டக்காட்டான் தன் வீட்டு பெண்களை விற்றாவது குடிக்க வேண்டும் என்கிற மனநிலையை விட்டு மாறும் வரை இந்த அவலங்கள் தொடரும். அதைவிட்டு விட்டு ஏனடா அரசாங்கங்களை குறை கூறுகின்றீர்கள்? நாட்டில் உங்கட கூட்டத்தை போன்று தான் மற்ற சமூகங்களும் பல பொருளாதார சிக்கல்களில் வாழ்க்கையை கடக்கின்றார்கள். ஆனால் இலவசத்திலையே பிறந்து இலவசத்திலையே வளர்ந்து எந்த வித நாகரீகத்தையும் கற்றுக்கொள்ளாத உண்ட சமூகம் மட்டும் தான் தங்களை மாற்றிக்கொள்ளாமல் அதையும் அரசாங்கம் செய்ய வேண்டுமென்று ஒப்பாரி வைக்கின்றது. என்ன மனிசர் கூட்டமடா நீங்கள்

    ReplyDelete
  3. நிச்சயமாக அந்த இளம்யுவதிக்கு நீதி கிடைக்க வேண்டும்.ஒவ்வொரு முஸ்லீம்களும் இதையே விரும்புவார்கள் காரணம்,முகமது நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள் எனது மகள் பாதிமா திருடினாளும் கையை வெட்டுவேன் என்று சொன்ன செய்தி முழுஉலக முஸ்லீம்களுக்கும் தெரியும். ஆகையாள் முஸ்லீம்கள் நீதீயை விரும்புபவர்கள்.இங்கே உன்மையான நீதி வேண்டுமென்றாள் முதளிள் அந்த யுவதியின் தாய்,தந்தை.இருவரையு பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் இவர்கள் இருவருமெ முதல் குற்றவாளிகள்.
    (ஸல்)

    ReplyDelete
  4. டேய் கேன கிறுக்கனே, இனவாத நாயே! அரசியல் லாபதிக்கு "பீ" யா தின்கிற பண்ணியே.. இனத்தை வைத்து அரசியல் செய்யும் ஈன பிறவி நீ பிள்ளையனோடு கூட்டு வைக்க அவனை ஜெயிலில் பார்க்க போனாய்,துமிந்த சில்வா விடுதலைக்கு கையெழுத்து இட்டாய்,5000 ரூபா கொடுப்பனவு இல்லாமல் உனக்கு வாக்களித்த மட்டக்குளி தமிழ் மக்கள் வீதிக்கு வந்த பொழுது "பொட்ட"மாதிரி வீட்டில் இருந்தாய் சம்பந்தமே இல்லாமல் பொதுவில் முதல் பொலி கண்டி வரை வந்து செல்பி எடுத்து படம் காட்டினாய்!சிறுவர்களை வீட்டு வேலைக்கு வைத்த யாராக இருந்தாலும் குற்றவாளிகளே!நீ மலையகத்தை பிரதி படுத்தும் அமைச்சர் தானே?உன்னை மாதிரி பணம்,பதவிக்கு மலையகத்தை விற்று பிழைக்கும் "மாமா" பையன்கள் ஒழுங்கா இருந்தா எதுக்குடா அந்த சிறுமிக்கு இந்த நிலைமை?அந்த சிறுமியின் மரணத்திற்கும் நீயும் உன்னை மாதுரி மலையக மக்களை வைத்து "பீ" தின்னும் மற்ற பன்னிகளும் தான் பொறுப்பு.பெரிய புடுங்கி "பு" மாதுரி அரசியலில் சம்பாதித்ததை பொது வாழ்க்கைக்கு செலவு செய்தவன் என்று சொன்னா?இந்த சிறுமியின் மரணத்தை வைத்து அரசியல் லாபம் தேடுகிறாய் இந்த பொழப்புக்கு பொம்புளய கூட்டி குடுத்து வாழு.நீ சரியான ஆம்பிளையா இருந்தா வியாழேந்திரன் வீட்டுக்கு முன்னாள் சுட்டு கொல்ல பட்ட அந்த மரணித்துக்கு நியாயம் கேளு!புங்குடு தீவு விந்தியா கொலைக்கு நியாயம் கேளு! விந்தியா கொலைக்கு ஒரு "பு"மவனும் வாய திறக்கவில்லை.ஒரு அப்பாவி ஏழை சிறுமியின் மரணத்தில் அரசியல் பண்ணி பிழைப்பதை விட கொழும்பில் வீதியில் அலையும் தேவடியாக்களின் மூத்திரத்தை குடி. எங்கே?இந்த இனவாத "பொட்ட" கி வக்காலத்து கருத்து சொல்லும் சொம்பு தூக்கிகள் UNKNOWN - suhood MIY - ஈன பிறவி ஜெயபாலன்?

    ReplyDelete
  5. கேவலமான அதிக வாசகர்கள் இருப்பது என்பதனை விட நாகரீகமான சொற்ப வாசகர்கள் இருப்பதே பலமுள்ளது என்பதனை JM எப்போது தான் உணருமோ தெரியாது. காம சூத்திரம் படிப்பதனைவிட அருவருப்பாக இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.