Header Ads



ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல - நாமல்


ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தொற்று நோய் ஏற்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும், பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்தும் தாம் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை நடாத்துவதற்கு மக்களுக்கு உரிமையுண்டு, எனினும் உலகம் முழுவதிலும் பெருந்தொற்று நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போராட்டத்தில் ஈடுபட்டார் எனவும் அப்போது அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.