Header Ads



சிறுமியின் மரணத்தினை அரசியல் மயப்படுத்தவேண்டாம் - அளவுக்கதிக முக்கியத்துவத்தையும் வழங்கவேண்டாம் - சரத் வீரசேகர


நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த வேளை சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது சிறுமி தொடர்பான விவகாரம் என்பதால் இந்த விடயத்திற்கு அளவுக்கதிகமான முக்கியத்துவத்தை வழங்கவேண்டாம் அரசியல் மயப்படுத்தவேண்டாம் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த குடும்பம் பெரும் துன்பத்தையும் சமூக களங்கத்தையும் எதிர்கொண்டுள்ளது எனவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.

பொலிஸார் இந்த விவகாரத்தை உரியமுறையில் விசாரணை செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்களின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த விபரங்களை நீதிமன்றம் கோரியுள்ளது விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.