கொரோனா என்பது உலக சனத்தொகையை கட்டுப்படுத்த, சியோனிச இலுமினாட்டிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயிரியல் யுத்தமாகும் - நஸீர் ஹாஜியார்
- பாறுக் ஷிஹான் -
கொரோனா என்பது ஒரு உயிரியல் யுத்தமாகும்.இது உலக சனத்தொகையை கட்டுப்படுத்துவதற்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் போக்கினை மாற்றியமைப்பதற்கும் சியோனிச இலுமினாட்டிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயிரியல் யுத்தமாகும் என கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் ஏ.எம். நஸீர் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு வியாழக்கிழமை (08) மாலை அம்பாறை மாவட்டம் கல்முனையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில்
கொரோனா என்பது ஒரு உயிரியல் யுத்தமாகும்.உயிரியல் ஆயுதம்.உலக சனத்தொகையை குறைந்தது 500 கோடிக்கு மட்டுப்படுத்துவதற்காகவே சியோனிச இலுமினாட்டிகளின் புத்தகங்களை வாசிப்பதனால் தெளிவு கிடைக்கின்றது.புரட்டகோல் மற்றும் இலுமினாட்டி புத்தகங்களை வாசிப்பதன் ஊடாக அறிய முடியும்.சம காலத்தில் கொரோனா தொடர்பான திரைப்படம் கூட வெளியாகி இருக்கின்றது.மயங்கி விழுவது அம்புலன்ஸ் நோயாளிகளை கொண்டு செல்வது லொக் டவுண் செய்வது தொடர்பாக ஒரு திரைப்படமே வந்திருந்தது.அது இன்று நிஜமாகவே செய்யப்படுகின்றது.
இது உலக சனத்தொகையை கட்டுப்படுத்துவதற்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் போக்கினை மாற்றியமைப்பதற்கும் சியோனிச இலுமினாட்டிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயிரியல் யுத்தமாகும். இதனை தெளிவாக ஈரானின் ஆன்மீகத்தலைவர் இமாம் அலி கொமைனி குறிப்பிட்டிருக்கின்றார்.அதில் அவர் இது ஒரு உயிரியல் யுத்தம்.இவ் யுத்தத்தில் மரணிப்பவர்கள் சஹீத்(புனித போரில் இறப்பவர்கள் ) ஆக்கப்படும் ஜனாசாக்களை(சடலங்களை) கபனிடத்தேவையில்லை குளிப்பாட்டத்தேவையில்லை.
அவ்வாறே அடக்கி விடுங்கள் என கூறியுள்ளார்.அது தான் ஈரானில் நடந்தது.இது தான் உலகத்தில் ஜனாசா (சடலம்) அடக்குவதில் எழுந்த பிரச்சினையாகும்.இந்த ஆன்மீகத் தலைவரின் தெளிவான விளக்கம் சகல நாடுகளிலும் பின்பற்றப்பட்டிருந்தால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது.இது திட்டமிடப்பட்ட சர்வதேச மானிட வர்க்கத்தினரான இலுமினாட்டிகளினால் செய்யப்பட்ட சதியாகும்.இந்த யுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும்.
கொரண்டைன் என்பது இப்னுசினா காலத்தில் பாரசீகத்தில் உருவாக்கப்பட்டது.இப்னுசினா காலத்தில் கொரண்டைன் என்பது 40 இனை குறிக்கும்.40 நாட்கள் தனிமைப்படுத்தி இருப்பதை அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.வினாகிரியினால் கைகளை கழுவி வாய்களை கொப்பளியுங்கள் என அக்காலத்திலே குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இது ஒரு உயிரியல் யுத்தம்.திட்டமிட்டு செய்யப்பட்டதொன்றாகும் என குறிப்பிட்டார்.
Appppa kandupudichchittaaruppa....😂😂😂😂😂😂😂😂
ReplyDeleteReal point who know
ReplyDeleteOn day thajjal will come... But only muhmeen know
நஸீர் ஹாஜி சொல்வது 100% உண்மை
ReplyDelete