Header Ads



சிதைந்து கரையொதுங்கிய கடலாமை


-எஸ்.நிதர்ஷன்-

வேலணை - துறையூர் கடற்கரையில், இன்று (04) அதிகாலை , உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று -04-, தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கரை ஒதுங்கிய கடலாமையை இனங்கண்டு, வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்தனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்த நிலையில், அதன் பின்னர் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து ஒதுங்கி வருகின்றன.

இதுவரையில், தீவகப் பகுதிகளில், ஒரு திமிங்கலம், ஒரு டொல்பின் மற்றும் மூன்று கடலாமைகள் என்பன கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.