Header Ads



கல்கிசை சிறுமி விவகாரம்: 4 பேர் பிணையில் விடுதலை


15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மிஹிந்தளை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் இருதய விசேட வைத்திய நிபுணர் உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், கொழும்பு மேலதிக நீதவான் லோ(ச்)சனா அபேவிக்ரம முன்னிலையில், இன்று பிரசன்னப்படுத்தப்பட்டபோது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று -09- அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த சிறுமி அவர்களை அடையாளம் காட்டியுள்ளார்.

இதேநேரம், 15 வயது சிறுமியை விற்பனை செய்வதற்காக, விளம்பரம் வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு இணையத்தளத்தின் உரிமையாளர், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.