Header Ads



நாடு திறக்கப்படும் வரை அரசியல்வாதிகள் பொறுமையாகயிருக்க வேண்டும், 4 வது அலையை உருவாக்குவதை தவிருங்கள் - நாமல்


நாட்டை திட்டமிட்ட முறையில் திறந்துகொண்டிருக்கின்ற சூழலில் அரசியல்வாதிகள் கொரோனாவைரசின் நான்காவது அலையை உருவாக்குவதை தவிர்க்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார அதிகாரிகள் முன்வைத்துள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என அமைச்சர் அம்பாந்தோட்டையில் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல்வாதிகளும் முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது பொதுமக்களின் பிரதிநிதிகளின் கடமை என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரம் காரணமாக பொதுமக்கள் பெரும் சுமையை சுமக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர்  நாடு திறக்கப்படும் வரை அரசியல்வாதிகள் பொறுமையாகயிருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.