Header Ads



தேசியப் பட்டியல் எம்.பியாக, ரணில் சத்தியப்பிரமாணம்


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக, ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (23) பாராளுமன்றம் காலை 10 மணிக்கு கூடியது.

இதன்போது, முதலாவது கடமையாக, ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில், தமக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியலை ஐக்கிய தேசியக் கட்சி நிரப்பவில்லை, நீண்ட இழுப்பறிக்குப் பின்னர், கட்சியின் தலைவரையே நியமிப்பதற்கு கட்சியின் செயற்குழு அண்மையில் தீர்மானித்திருந்தது.

அதன்பிகாரம், 225 ஆவது பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

அவர், நான்கு தசாப்த காலமாக பாராளுமன்றில் அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.