Header Ads



போலி பிரசாரம் தொடர்பான விசாரணைகளுக்காக விசேட பிரிவு - கைதானால் தண்டனை வழங்கப்படும்


சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் என்பவற்றை பயன்படுத்தி போலியான தகவல்களை பகிர்ந்து, பொதுமக்களை பதற்றத்துக்கு உள்ளாக்குவோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, இவ்வாறான போலி பிரசாரம் தொடர்பான விசாரணைகளுக்காக விசேட விசாரணை பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு போலி தகவல்கள் பகிரப்படுவதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதுடன், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்படைவாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறான செய்திகளை சமூக வலைத்தளங்களின் வெளியிடும், அதனை பகிர்ந்துகொள்வோர் உள்ளிட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போலி செய்திகளை பகிர்வதன் ஊடாக, நாட்டு மக்களை பதற்றமான நிலைக்கு கொண்டு யாராவது உள்ளாக்கினால், அது பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98ஆவது சரத்தின் கீழ், தண்டனை வழங்கக்கூடிய குற்றம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.