இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆமை, அறிக்கை சமர்ப்பிக்க காலி நீதிவான் உத்தரவு
(சி.எல்.சிசில்)
காலியிலுள்ள உனவட்டுன கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இறந்த ஆமை, இரசாயன விஷத்தால் உயிரிழந்ததா என்பது குறித்து அறிக்கையைத் தொகுக்குமாறு காலி மேலதிக நீதிவான் பவித்திரா சஞ்ஜீவனி ஹிக்கடுவ வனவிலங்கு அலுவலகத்துக்கு இன்று உத்தரவிட்டார்.
நேற்று(2) காலியிலுள்ள உனவட்டுன கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஆமை பிளாஸ்ரிக் துகள்களை உட்கொண்ட பின் அல்லது தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து கடலுக்குள் விடப்பட்ட இரசாயனப் பதார்த்தங்கள் காரணமாக இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆமையின் உடலத்தை அறிக்கைக்காக அட்டிட்டிய வனவிலங்கு கால்நடை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் ஹிக்கடுவ வனவிலங்கு அலுவலகத்துக்கு நீதிவான் உத்தரவிட்டார். Thinakkural
Post a Comment