Header Ads



தென்னை ஓலைகளுக்கு தீ மூட்டிய போது, குண்டு வெடித்து வயோதிபர் காயம் - புதுக்குடியிருப்பில் சம்பவம்


புதுக்குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததில் 66 வயதான வயோதிபர்  காயமடைந்துள்ளார். 

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை 05 ஆம் வட்டாரப்பகுதியில் வீட்டுகாணியை  இன்று (16) மாலை துப்பரவு செய்து தீ மூட்டியபோது குண்டு வெடித்துள்ளது.

குறித்த வயோதிபர் தனது காணியில் உள்ள தென்னை ஓலைகளை எடுத்து ஓரிடத்தில் குவித்து, தீ மூட்டியுள்ளார் இதன்போதே குண்டு வெடித்துள்ளது.

காயங்களுக்கு உள்ளான வயோதிபர், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குண்டு வெடிப்பு தொடர்பில்  புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளனர். அத்துடன் குண்டு வெடித்தப் பகுதியை, குறித்த   அபாய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

 நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, அந்த அபாய பகுதியில் வேறு வெடிபொருள்கள் இருப்பது தொடர்பில் ஆய்வு செய்ய நடவடிக்கை ஏடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.