Header Ads



அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் - Hiru News

- Hiru News -

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் மன்றுரைத்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று -28 இடம்பெற்றபோது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், குறித்த விடயத்தை மன்றுரைத்ததாக, நீதிமன்றத்திற்கான Hiru செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி முஸ்லிம் சட்டம் சம்பந்தமாக மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அசாத் சாலிக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றில், இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.