Header Ads



எனது உயிருக்கு அச்சுறுத்தல், பொலிஸ்மா அதிபருக்கு ஷானி அவசர கடிதம்


குற்ற விசாரணைப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்னவிற்கு அபேசேகர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் ,இதனால் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் அவருக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

சாட்சியங்களை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தி ஷானி அபேசேகர நீண்ட நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.