அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு நெருக்கடியா..?
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி ஹோட்டலொன்றில் பிறந்தநாள் விருந்துபசாரம் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நடிகை பியூமி ஹண்சமாலி வீடியோவை வெளியிட்டு மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் இதற்கு முன் நான் பேசியது இல்லை. இதுவே முதன்முறை எனத் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரோ அல்லது அவரது மகனுடனோ எனக்கு எவ்வித தனிப்பட்ட தொடர்பும் இல்லை. “நான் அவருடன் இதற்கு முன்பு பேசியதில்லை. என்னிடம் இரண்டு தொலைபேசி எண்கள் உள்ளன, நான் அவருடன் பேசியிருந்தால் என் தொலைபேசி விபரங்களை யார் வேண்டுமானாலும் சரிபார்க்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.
எனது வழக்கறிஞர் கூறியதைக் கேட்டே அவர் அமைச்சருக்கு போன் செய்ததாக கூறினார். “எங்களிடம் எந்த ஆடைகளும் இல்லை. எனவே, நான் அமைச்சருக்கு போன் செய்தேன், நான் அழுதேன், ”என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை நடிகையுடன் பேசிய விவகாரத்தால் அமைச்சர் சரத்வீரசேகரவுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அபாண்டமான முறையில் முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தி தன்னை சீர்திருத்த வாதியாக வெளிக்காட்ட முற்பட்ட அக்கிரமத்தின் விளைவு.
ReplyDelete