ஒவ்வொரு துறையும் படுகுழியில் மூழ்கி, பங்களாதேஷில் இருந்துகூட கடன் வாங்கும் அளவுக்கு நாடு வீழ்ச்சி - சஜித் அறிக்கை
சௌபாக்கியத்தின் தொலைநோக்கு, எதிர்கால தலைமுறையினருக்கு துயரத்தின் பார்வையாக மாறியுள்ளது, அடுத்த தலைமுறையே அதன் துரதிர்ஷ்டவசமான விதியை அனுபவிக்க வேண்டியிருக்கும். இரண்டு ஆண்டுகளாக மக்கள் மிகவும் கடுமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், அரசாங்கத்திற்கு உடனடி தீர்வுகளைத் தவிர குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால தீர்வுகள் இல்லை. கோவிட்டின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் எழுந்த சூழ்நிலையிலிருந்து அரசாங்கம் எந்தப் பாடங்களையும் கற்றுக்கொள்ளவில்லை.
முழு நாடும் அதன் இருண்ட விளைவுகளை அனுபவித்து வருகிறது.
நாட்டின் குழந்தைகளின் கல்வி சரிந்துள்ளது. அரசு ஊழியர்கள், சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்கள், நாள் கூலித் தொழிலாளர்கள்,தோட்டத் தொழிலாளர்கள்,சுயதொழில் செய்பவர்கள்,வாடகை வாகன தொழிலாளர்கள், தனியார் துறை தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பெரிய மற்றும் சிறு தொழிலதிபர்கள் உட்பட அனைத்து குடிமக்களும் இந்த நேரத்தில் பெரும் குழப்பமான நிலையில்உள்ளனர்.
அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள்,ஒரு சிறிய குழு மட்டுமே இந்த பேரழிவைப் பயன்படுத்திக் தமக்கு சாதகமானவைகளைப் பெற்று கொள்கிறது.
சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், விரைவுபடுத்துவதற்கும் ஒரு சிறப்பு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்துவதோடு, நாட்டு மக்கள் சார்பாக ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ .20,000 / - கொடுப்பனவு வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். லீசிங், நீர் மற்றும் மின்சக்தி துறைகளிலும் சலுகைகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவற்றைத் தான் செய்ய வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக வாழ்க்கையுடன் விளையாடுவதல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
கோவிட்டின் கட்டுப்படுத்தலுக்கு இராஜாங்க அமைச்சர் பரோபகாரர்களிடமிருந்து நன்கொடைகளை கோரியபோது, ஒரு அரசாங்க அமைச்சர் அரசாங்கத்திடம் போதுமான பணம் இருப்பதாகக் கூறினார். அப்படியானால், இந்த நேரத்தில் தேவைப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பொறிமுறையை செயல்படுத்த அரசாங்கம் அந்த பணத்தை பயன்படுத்த வேண்டும்.
கொரோனா பேரழிவிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக உலகின் ஒவ்வொரு நாடும் அதன் குடிமக்களுக்கு தடுப்பூசி போட போட்டியிட்டபோது, நம் நாட்டில் நடந்தது என்னவென்றால், மாயைகள் முன்னிலைக்குக் கொண்டுவர போட்டியிடப்பட்டது . நம் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து 500,000 தடுப்பூசிகளும், உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து 265,000 தடுப்பூசிகளும், சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 600,000 தடுப்பூசிகளும், ரஷ்யாவிலிருந்து சுமார் 15,000 தடுப்பூசிகளும் பெற்றன.ஒரு நாடாக, அரசாங்கம் தனது குடிமக்களுக்காக 500,000 தடுப்பூசிகளை மட்டுமே நிதி கொடுத்து வாங்கியது. கோவிட் அறக்கட்டளை நிதிக்கு ரூ.1700 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடைகள் கிடைக்கப்பெற்றதுடன்
அதில் ரூ.300 மில்லியன்கள் தான் இன்று வரை செலவளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் தனது மக்களின் வாழ்க்கையில் இத்தகைய அக்கறையைத் தான் காட்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையிலோ அல்லது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயல்முறையிலோ அரசாங்கம் வெளிப்படையான முறையில் அல்லது குறைந்தபட்சம் முறையான ஒழுங்கின் படியோ மேற்கொள்ளவில்லை என்பது ஒரு பெரிய சோகமாகும்.
அரசாங்கத்தின் விவேகமற்ற திட்டத்தின் காரணமாக கொரோனா இல்லாத வாழ்க்கைக்கு பதிலாக கொரோனாவுடன் ஒரு வாழ்க்கையை மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதையும், இந்த பேரழிவால் இழந்த ஒவ்வொரு உயிருக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
உங்கள் ஆலோசனையை சரி சொல்லுங்களேன் தலைவரே.
ReplyDelete