Header Ads



74 பேர் தி​டீரென மயங்கியதால், பல்லேகலையில் ஏற்பட்ட பதற்றம்


கண்டி-பல்லேகல பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்லேகல முதலீட்டு ஊக்குவிடப்பு வலயத்திலுள்ள ஆடைக் கைத்தொழில் சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 74 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.

இதனையடுத்தே இவ்வாறான பதற்றமான நி​லைமை​யொன்று ஏற்பட்டுள்ளது.

வாந்தி மற்றும் தலைவலி காரணமாகவே இவர்கள், மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகவீன மடைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசிக்கும் இவ்வாறு நோய்வாய்ப்பட்ட​தற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.