பௌத்த பிக்குவின் துணிகரச் செயல் - 70 வயது முதியவரை முதலையின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுத்தார்
30 வயதான பௌத்த துறவி, அநுராதபுரத்தில் உள்ள ஏரியில் குதித்து, அங்கு முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட 70 வயது முதியவரை மீட்டுள்ளார்.
இரண்டு பேரும் கடந்த திங்கட்கிழமை, 7 ஆம் திகதி ஏரியில் குளித்துள்ளனர்
இருப்பினும் 70 வயதான நபர், முதலை தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டபோது, துறவி குளித்துவிட்டு விகாரைக்குத் திரும்பத் தயாராகி கொண்டிருந்தார்.
துறவி பின்னர் ஏரியில் குதித்து, அந்த மனிதனைக் காப்பாற்ற முதலைடன் போராடினார்.
காலில் பலத்த காயம் அடைந்த அந்த நபர், பின்னர் குடியிருப்பாளர்களின் உதவியுடன் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Post a Comment