Header Ads



காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட்டு, 4 திருமணத்திற்கும் தடை, மணமகளின் கையொப்பமும் அவசியம் - அமைச்சரவையில் தீர்மானம்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

நாட்டில் அமுலில் இருந்து வரும் காதி நீதி­மன்ற முறைமை இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்டும். அத்­தோடு முஸ்லிம் ஆண்­களின் பல­தார மணத்­துக்கு தடை விதிக்­கப்­பட வேண்டும். முஸ்லிம் பெண்­களும் நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்டும்.

மேலும் முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். திரு­ம­ணத்­துக்கு மண­ம­களின் சம்­மதம் பெறப்­பட்டு பதிவில் கையொப்பம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் என அமைச்­ச­ரவை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ள­தாக நீதி­ய­மைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்ட சீர்­தி­ருத்­தங்­க­ளுக்­கான ஆலோ­சனை குழு­வுக்கு ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­ட­தாக குழுவின் தலை­வரும் வக்பு சபையின் தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரித்தார்.

என்­றாலும் காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லா­தொ­ழிக்­காது அதன் கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­து­மாறும் அது தொடர்பில் கவனம் செலுத்­து­மாறும் ஆலோ­ச­னைக்­குழு அமைச்­ச­ர­வைக்கு பரிந்­து­ரை­களை வழங்­கி­யுள்­ளது எனவும் அவர் கூறினார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கையில், ‘காதி நீதி­ப­திகள் மற்றும் அவ­ரது தகை­மைகள் தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதால் இக்­கட்­ட­மைப்­பினை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டுவோர் சட்­டத்­த­ர­ணி­க­ளா­கவும், முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் தொடர்பில் அறி­வுள்­ள­வ­ரா­கவும் சட்­டத்­த­ர­ணி­யாக 5 வருட அனு­பவம் உள்­ள­வ­ரா­கவும் இருக்க வேண்டும் என குழு பரிந்­து­ரை­களை வழங்­கி­யுள்­ளது. அவர்கள் 25 வய­துக்கும் 55 வய­துக்கும் இடைப்­பட்­ட­வ­ராக இருக்க வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­துள்­ளது.

மேலும் ஏனைய நீதி­ப­தி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வது போன்ற பயிற்­சிகள் அவர்­க­ளுக்குத் தொடர்ந்து வழங்­கப்­பட வேண்டும். சம­ரச முயற்­சிகள் போன்ற பயிற்­சிகள் வழங்­கப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளுக்கு ஏனைய நீதி­ப­தி­க­ளுக்கு வழங்­கப்­படும் சம்­பளம் வழங்­கப்­பட வேண்டும். காதி நீதி­மன்ற கட்­ட­மைப்­பினை மேம்­ப­டுத்­து­வதன் மூலம் இதன் செயற்­பா­டு­களை உச்ச நிலைக்கு கொண்­டு­வர முடியும்.

காதிகள் மேன்­மு­றை­யீட்டு சபைக்கு நிய­மனம் பெறும் உறுப்­பி­னர்­களின் தகை­மைகள் தொடர்­பிலும் முன்­மொ­ழி­வுகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அவர்கள் 10 வருட அனு­பவம் கொண்ட சட்­டத்­த­ர­ணி­க­ளாக, முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் அறி­வுள்­ள­வ­ராக 35 – 65 வய­துக்­குட்­ட­பட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும் எனவும் முன்­மொ­ழி­வுகள் வைக்­கப்­பட்­டள்­ளன.

காதி நீதி­மன்ற முறை­மையை மேம்­ப­டுத்­து­வதா என்­பது தொடர்பில் அமைச்­ச­ர­வையே தீர்­மா­னிக்க வேண்டும். இம்­மு­றைமை இல்­லா­ம­லாக்­கப்­பட்டால் திரு­மணம் தொடர்­பான விட­யங்­க­ளுக்கு மாற்றுத் தீர்­வாக குடும்ப நீதி­மன்றம் நிறு­வப்­பட வேண்டும். குடும்ப நீதி­மன்றம் நிறு­வப்­ப­டாத பட்­சத்தில் மாவட்ட நீதி­மன்­றி­னையே மாற்றுத் தீர்­வாக கொள்ள வேண்டும். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் மாவட்ட நீதி­மன்­றத்­தி­னூ­டாக நிர்­வ­கிக்­கப்­பட முடியும் எனவும் ஆலோ­ச­னைகள் குழுவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

1951ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய சீர்­தி­ருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் 2020.12.31ஆம் திகதி 10 உறுப்­பி­னர்­களைக் கொண்ட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு அமைச்­ச­ர­வை­யினால் தீர்­மா­னிக்­கப்­பட்ட விட­யங்­களைத் தவிர முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தின் காதி முறை­மைக்கு உட்­பட்ட ஏனைய விட­யங்­களை மையப்­ப­டுத்தி தனது முன்­மொ­ழி­வு­களை அறிக்­கை­யாக கடந்த திங்­கட்­கி­ழமை நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யிடம் சமர்ப்­பித்­தது.

ஆலோ­சனைக் குழு­வுக்கு ஏற்­க­னவே அமைச்­ச­ரவை மேற்­கொண்ட தீர்­மானம் அறி­விக்­கப்­பட்­டது. முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். திரு­மணப் பதிவில் மண­ம­களின் கையொப்பம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். பெண்கள் காதி நீதி­ப­தி­ப­ளாக நிய­மிக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும் காதி­நீ­தி­மன்ற முறைமை இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்டும். முஸ்லிம் ஆண்­களின் பல­தார மணம் தடை செய்­யப்­பட வேண்டும் என 2021.03.08 ஆம் திக­திய அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆலோ­ச­னைக்­கு­ழு­வுக்கு 2021.04.29ஆம் திகதி அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

திரு­ம­ணத்­திற்கு முன்­ன­ரான உள­வ­ளத்­துணை ஆலோ­ச­னை­களை ஊக்­கு­வித்தல் திரு­ம­ணத்­துக்கு முன்­ன­ரான ஒப்­பந்­தங்­களை அங்­கீ­க­ரித்தல் திரு­மண சம­ரச செயற்­பா­டு­க­ளுக்­கு­ரிய வச­தி­களை ஏற்­ப­டுத்தல் போன்ற முன்­மொ­ழி­வு­க­ளையும் குழு சமர்ப்­பித்­துள்­ளது.

மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை விளங்­குதல், இஸ்­லா­மிய சட்­ட­வியல் அர­சி­ய­ல­மைப்பு கோட்­பா­டுகள், ஏனைய நியா­யா­திக்­கங்­களில் காணப்­ப­டு­கின்ற சட்­ட­மா­தி­ரிகள் என்­பன குழுவின் கலந்­து­ரை­யா­டலில் செல்­வாக்கு செலுத்­தி­ய­தா­கவும் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்­துள்ளார்.

தற்­போது அமு­லி­லுள்ள சட்­டத்தில் ‘வொலி’யின் பிர­சன்னம் அவ­சி­ய­மாகும். என்­றாலும் இது தொடர்பில் குழு அங்­கத்­த­வர்­க­ளி­டையே முரண்­பாடு ஏற்­பட்­டது. ‘வொலி’ அவ­சி­ய­மில்லை என இருவர் முரண்­பட்­டனர். இந்­நி­லையில் மணப்­பெண்ணின் விருப்பம் இது தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை மக்களுக்கு மிகவும் அவசியமான தீர்வுகளை இச்சீர்திருத்தங்கள் வழங்கும் என குழு ஆத்மார்த்தமாக நம்புகிறது. முன்மொழிவுகளை கவனத்தில் கொண்டு சமத்துவம் மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய ஒரு முடிவை மேற்கொள்ளுமாறு இக்குழு அமைச்சரவையை வேண்டுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக்குழு முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையிலான குழு 2018இல் சமர்ப்பித்த சீர்திருத்தங்கள் தொடர்பான அறிக்கை மற்றும் ஏனைய அமைப்புகள் தனியார்களின் சிபாரிசுகளையும் கவனத்தில் கொண்டு அறிக்கை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

4 comments:

  1. Now goverment want to turn/forget other crisess isues example oil prices and life expensives so going to open muslims files.

    ReplyDelete
  2. முஸ்லீம் தனியார் சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் காலத்திற்கு காலம் சில மாற்றங்கள் உள்வாங்கப்பட்டாலும், இம்முறை அமைச்சரவை மேற்கொண்டுள்ள மாற்றங்கள் பல பாதகமான அதிர்வலைகளை தோற்றுவிக்கக் கூடும். காரணம், இப்புதிய சீர்திருத்தங்கள் புரட்சிகரமானவை என சிலர் கருதினாலும் அவற்றின் சில பகுதிகள் இஸ்லாமிய சட்ட வரம்புகளை மீறும் தன்மை கொண்டதாகத் தோன்றுகின்றன.

    முன்மொழிவுக்காக தெரிவு செய்யப்பட குழுவினர், இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து இரு வெவ்வேறுபட்ட முன்மொழிவுகளை முன்வைத்தமையால் அரச தரப்பினர் தமக்கு சாதகமான முன்மொழிவை ஏற்று அதனை சட்டமாக்க விளைகின்றமை தெளிவு.

    ஆனால், கால, சமூக மாற்றங்களுக்கேற்ப முஸ்லிம் பெரும்பன்மை நாடுகளில் கூட முஸ்லீம் தனியார் சட்டத்தில் பல மாற்றங்கள் சரிஆவின் எல்லைக்குள் நின்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் அத்தகைய மாற்றங்களை உள்வாங்கத் தயங்கி, பாரம்பரிய சட்ட மரபிற்குள் மட்டுமே நின்றதால் தமக்கு இலகுவான விதத்தில் ஒரு குழுவின் சீர்திருத்தங்களை மட்டுமே அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளமை தெளிவாகின்றது.

    நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான முன்மொழிவுகள் சரிஆவின் இலக்குகளுக்கு முரணானவை என்று சொல்ல முடியாவிட்டாலும், அதில் சில மாற்றங்களுடன் முஸ்லீம் சமூகம் ஒருமித்ததாக தமது முன்மொழிவை வழங்கிருந்தால், இத்தகைய ஒரு நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருக்காதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete
  3. பால் ஏற்ற்த்தாழ்வின்றி அனைத்து முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் விவாதம் மிகவும் sensitive வான விடயமாக உள்ளது. இந்த விவாதத்துக்கு பல முஸ்லிம் நாடுகளும் முகம் கொடுத்து சில மாற்றங்களை செய்து வருகிறது. எந்த நீதிமன்றமாயினும் எந்த மதத்து பெண்கள்ஆயினும் கண்ணீர் சிந்ததாத சூழலை உருவாக்க தவறினால் தோற்றுப்போகும். முஸ்லிம் நாடுகளில் உள்ள விவாதங்களை அங்கு ஏற்படுகிற மாற்றங்களை கூர்ந்து கவனிப்பது முன்னுதாரணமாக கொள்வது அவசியம்.

    ReplyDelete
  4. இனி இதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் ஒன்றிணைந்து ஒரே முடிவை எடுத்து உள்ளூர் சர்வதேச மட்டத்தில் அதனை முன்னெடுத்தால் ஒரு நியாயமான நல்ல முடிவொன்றை எதிர்பார்க்கலாம். அதுதவிர ஒவ்வொருவரும் அவரவர்களுடைய கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கொட்டித் தீர்ப்பதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.