Header Ads



சிறை நிலவரம் எப்படி உள்ளது..? மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர Mp தெரிவித்தவை


சிறைச்சாலையில், சமூக இடைவெளி, சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்தல், முகக்கவசத்தை அணிதல் அல்லது கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கான நடைமுறையை கடைப்பிடித்தல் என்பன  பூஜ்ஜியமாகும் எனத் தெரிவித்த, மரண தண்டனை கைதியாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அங்கு கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதை தவிர்க்க முடியாது என்றார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

”சிறைச்சாலைகளில் சமூக இடைவெளி, பூஜ்ஜியமாகும்” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

No comments

Powered by Blogger.