Header Ads



Dr கோத்தபாய தலைமையிலான குழுவினருக்கு ஹரீன் நன்றி தெரிவிப்பு


வெளிநாட்டில் மேற்கொள்ளவேண்டிய மிகவும் கடினமான சிகிச்சையை இலங்கையில் மேற்கொண்ட, மருத்துவர் கோத்தபாய தலைமையிலான  குழுவினருக்கு  ஹரீன் பெர்ணான்டோ நன்றி தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோ, தனக்கு சத்திரகிசிச்சையை மேற்கொண்ட, மருத்துவரான இருதய நோய் மருத்துவர் கோத்தபாய ரணசிங்கவிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்

தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர்,  வாழ்க்கைக்கான இன்னொரு சந்தர்ப்பத்தை அளித்த இருதயநோய் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க தலைமையிலான அற்புதமான  குழுவினருக்கு, நன்றி என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனக்கு வெளிநாட்டில் மிகவும் கடினமான சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது, ஆனால் உள்ளுரில் அவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டார்கள், எனது உயிரை காப்பாற்றிய இறைவனிற்கு இயேசுவிற்கு பரிசுத்த ஆவிக்கு நன்றி என அவர் பதிவிட்டுள்ளார்.

எனக்காக பிரார்த்தனை செய்த, மதவழிபாடுகளில் ஈடுபட்ட, அனைவருக்கும் நன்றி என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். Thinakkural


No comments

Powered by Blogger.