Header Ads



பல பௌத்த மதகுருமார்கள் கொரோனாவினால் பாதிப்பு - தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க கோரிக்கை


கொரோனா தடுப்பூசியை வழங்குவதில் பௌத்த மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என பௌத்த மதகுரு ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பௌத்த மதகுருமார் மத மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்களிற் கான விசேட முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியை வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த மெதகம தம்மானந்த தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பௌத்த சாசன அமைச்சு இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக பௌத்த மதகுருமாருக்கு தடுப்பூசியை வழங்க வேண்டும் என  அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல பௌத்த மதகுருமார்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். TL

3 comments:

  1. பரிசுத்த மாணவர்கள் (சூத்திரம் வேலை செய்ய ய வில்லை யாக்கும்)

    ReplyDelete

Powered by Blogger.