வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன, கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குங்குள் - இலங்கை மருத்துவ சங்கம்
இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு:
🛑 நோயாளர்களுக்கான கட்டில்கள், இட வசதி ஆகியன பாரியளவில் குறைந்து செல்கின்றன
🛑 அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன
🛑 வைரஸின் புதிய திரிபில் பரவும் வேகம் அதிகமாகவுள்ளது
🛑 தற்போது குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டவுடன் பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மற்றையவர்களுக்கும் தொற்று ஏற்படக்கூடும்
🛑 நோயாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் தற்போது சிரமமுள்ளதால் வீடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது
🛑 அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நோயாளர்களை தனிமைப்படுத்தி, வீட்டினுள் முகக்கவசத்தை அணிந்துகொள்வதை கட்டாயமாக்க வேண்டும்
🛑 வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நோயாளர்களுக்கு தேவையான பரசிட்டமோல் போன்ற ஆரம்ப சிகிச்சையை அளிக்க வேண்டும்
Post a Comment