Header Ads



ஞானசாரரை கைது செய்யாதது ஏன்..? றிசாத்தின் மனைவி கேள்வி


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் ஞானசார தேரரை கைதுசெய்யாதது ஏன் என கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை ஆணைக்குழு தனது அறிக்கையில் ஞானசார தேரர் குறித்து குறிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஞானசார தேரரையோ அல்லது ஏனையவர்களையோ கைது செய்யாதது ஏன் என ரிசாத்பதியுதீனின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்

 எனது கணவருக்கும்  உயிர்த்தஞாயிறுதாக்குதல்களுக்கும் எந்த தொடர்புமில்லை ஆனால் அவர் நீதிமன்ற உத்தரவின்றி மிகவும் அவமானகரமான முறையில் கைதுசெய்யப்பட்டார் என ரிசாத்பதியுதீனின் மனைவி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.