நாடு திரும்புவதில் சிக்கல் - மாலைத் தீவில் தனிமைப்படுத்தல்
கொரோனா பாதுகாப்பு வலயத்தில் இருந்தும் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் போட்டித் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இலங்கை அரசாங்கமும் தற்காலிக தடை விதித்துள்ளதால் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன நேற்றைய தினம் மும்பை அணிக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் மாலைதீவுகளுக்குப் புறப்பட்டுச் சென்றதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாலைதீவுகளுக்குச் சென்றுள்ள மஹேல ஜயவர்தன, 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குனராக செயற்பட்ட குமார் சங்கக்கார மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்பட்ட முத்தையா முரளிதரன் ஆகிய வீரர்களும் மாலைதீவுகளுக்குச் சென்று சுய தனிமைப்படுத்தலில் இருந்த பிறகு நாடு திரும்புவார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment