Header Ads



கடைசி வீரர் வீட்டிற்குச் சென்ற பின்னர்தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன்: டோனி


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனைத்து வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் வீடு திரும்புவதில் எம்எஸ் டோனி கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்தாலும், மன அழுத்தத்தில் வீட்டிற்குள்ளே இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறிது நேரம் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வந்தது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபக்கம் ஆதரவும் இருந்து வந்தது.

வீரர்களுக்கான ஐபிஎல் பயோ-பபுள் வெடித்து கொரோனா தொற்று வீரர்களையும், சப்போர்ட் ஸ்டாஃப்களையும் தாக்கத் தொடங்கியது. இதனால் ஐபிஎல் போட்டி உடனடியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது வீரர்கள் அவர்களது வீட்டிற்குச் செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். வெளிநாடு வீரர்களை அவர்களுடய சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஐபிஎல் நிர்வாகம், அணிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

No comments

Powered by Blogger.