இந்த ஆண்டு முதல் A/L மாணவர்களுக்கு, கொரிய மொழியை தேர்வு செய்ய முடியும் -
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு முதல் உயர்தரத்தில் கொரிய மொழி பரீட்சையில் சித்தியடைவோர் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்நுழைவதற்கான வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொரிய மொழியைக் கற்பதன்மூலம், கொரிய நாட்டில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரிய மொழியை உயர்தர வகுப்புக்களில் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment