Header Ads



கொரோனாவின் மூலத்தை 90 நாட்களில் கண்டுபிடியுங்கள்: உளவுத்துறைக்கு உத்தரவிட்ட ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தமது நாட்டின் உளவு அமைப்புகளிடம் கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களுக்குள் கண்டறிந்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த விஷயத்தில் தங்களுடைய முயற்சிகலை இரட்டிபாக்கி பணியாற்றுங்கள்," என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இதுநாள் வரை உலக அளவில் 16.8 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 35 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் வூஹானில் உள்ள கடல்சார் உயிரின உணவுச் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக தொடர்புபடுத்திய ஆய்வாளர்கள், அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்தே முதன் முதலாக மனிதர்களுக்கு பரவியதாக கருதினர்.

ஆனால், அமெரிக்க ஊடகங்களின் சமீபத்திய செய்திகளின்படி, வூஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்தே வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த செய்திகளில் இடம்பெற்ற தகவல்களை கண்டித்துள்ள சீனா, அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்படும் ஆய்வ கசிவு வாதங்கள்

சீனாவில் கோவிட்-19 வைரஸ் பரவலுடன் தொடர்புபடுத்தப்பட்ட ஹுனான் கடல்சார் உயிரின சந்தை

இந்த வாதங்கள் குறித்து ஆன்டனி ஸர்ச்சர், வட அமெரிக்க செய்தியாளர் என்ன கூறுகிறார் என பார்ப்போம்.

அமெரிக்க அரசில் நிலவி வரும் வெளிப்படைத்தன்மையின்படி, கோவிட்-19 பெருந்தொற்றின் மூலம் தொடர்பாக அந்நாட்டின் உளவு சமூகங்களுக்கு இடையே பிளவு காணப்படுகிறது. அது ஆய்வத்தில் இருந்தோ, விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கோ பரவியிருக்கலாம் என்று வாதிடப்பட்டாலும், எந்த தரப்பும் நிச்சயமாக அதை உறுதிப்படுத்தவில்லை.

அதுவேகடந்த ஆண்டு அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், வெளியுறவு செயலாளர் மைக் போம்பியோ, செனட்டர் டாம் காட்டன் உள்ளிட்டோர் ஊடகங்களிடமும் உலவ விட்டு அரசியல் செய்த ஆய்வக வைரஸ் கசிவு வாதத்தில் இருந்து மாற்றிச் சிந்திக்க இப்போதைய ஆட்சியாளர்களை தூண்டியது.

டிரம்பும் மைக் போம்பியோவும் அப்போது அந்த கூற்றை நிரூபிக்க உதவவில்லை. ஆனால், சந்தேக விதையை விதைக்கத்தூண்டினர். அந்த செய்தி பல வகையில் விரிவடைந்தாலும், சீன ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் பரவியது என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றதாகவே இருந்தது.

இந்த விவகாரத்தில் சீனா ஒத்துழைக்காதவரை, வைரஸின் மூலம் தொடர்பான உண்மையை மக்கள் அறியாமலேயே போகலாம். இதனால்தான் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வைரஸின் மூலத்தை கண்டறிய முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், ஒருவேளை, ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்தது என அமெரிக்கா கண்டுபிடித்தால் அது அமெரிக்கா, சீனா இடையிலான உறவை இனி வரும் காலங்களில் கடுமையாகவே பாதிக்கச் செய்யும் என்கிறார் ஆன்டனி ஸர்ச்ச்ர்.

ஜோ பைடனின் திடீர் உத்தரவுக்கு என்ன காரணம்?

கொரோனா வைரஸின் மூலம் தொடர்பாக அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,,அதிபராக பதவி ஏற்றவுடனேயே தொற்று பரவிய விலங்கிடம் இருந்து வைரஸ் மனிதனுக்கு பரவியதா அல்லது அது ஒரு ஆய்வக சம்பவமா என்பதை விளக்குமாறு அறிக்கை கோரியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. .

அந்த அறிக்கை தற்போது அவருக்கு அளிக்கப்பட்டதன் பின்னணியிலேயே தற்போது கூடுதலாக விரிவான அறிக்கையை அதிபர் கோரியுள்ளார்.

அந்த அறிக்கையில், "இன்றைய நிலவரப்படி, இரு சாத்தியமான வைரஸ் மூலம் குறித்து அமெரிக்க உளவு சமூகம் தமது கருத்துகளை வழங்கியிருந்தாலும், தீர்க்கமான முடிவை அவை எட்டவில்லை," என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் உளவு அமைப்புகளிடம் தங்களுடைய வைரஸ் மூலத்தை கண்டறியும் முயற்சியை இரட்டிப்பாக்குமாறு அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டின் நாடாளுமன்றத்திடம் அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜோ பைடன் அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா பணியாற்றும் என்றும் இதில் முழுமையாகவும் வெளிப்படையாகவும், தரவுகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் சர்வதேச புலனாய்வுக்கும் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், "கோவிட்-19 மூலம் தொடர்பாக நாடாளுமன்ற குழுக்களின் விசாரணைகளின்போது எழும் கேள்விகளால் எழுந்த நெருக்கடியிலேயே, அந்த கேள்விகளுக்கான பதில் அளிக்கும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதை உலக சுகாதார அமைப்பின் பொறுப்புக்கு அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் மாற்றியிருக்கிறது," என்று கட்டுரை ஒன்றில் கூறியுள்ளது.

மேலும், சிஎன்என் செய்தித் தொலைக்காட்சி செய்தியில், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்திருக்கலாம் என்பதை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்ட அமெரிக்க உளவு அமைப்பின் பிரிவை, தேவையற்ற நிதிச்சுமை நடவடிக்கை எனக்கூறி அதிபரின் நிர்வாகம் மூடி விட்டது என்று கூறப்பட்டது. இந்தப்பின்னணியிலும் அதிபர் ஜோ பைடனின் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. முதலில் உலக மக்களின் பரம்பரைக்கே பரம எதிரியான ஈவிரக்கமற்ற அரக்கர்களை மட்டுமே கொண்ட இஷ்ரேல் எப்படி உருவானது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.