Header Ads



கொரோனா தொற்றுடன் 70 குழந்தைகள் பிறப்பு - தனித் தனியாகவும், பாதுகாப்பாகவும் கவனிப்பு


தற்போதைய நிலையில் சொய்சா மகளிர் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான 70 குழந்தைகள் பிறந்துள்ளதாக புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கமஹெதிகே தெரிவித்தார். 

அந்த குழந்தைகள் அனைவரையும் தனித் தனியாகவும் பாதுகாப்பாகவும் கவனித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

எதிர்காலத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றுக்குள்ளான குழந்தைகளை பராமரிப்பதற்காக தனியே பிரிவு ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.