Header Ads



இலங்கையில் இன வெறுப்­பு­ணர்ச்­சி பேச்­சுக்­களில் 58 வீத­மா­னவை முஸ்­லிம்­களை அல்­லது இஸ்­லாத்தைத் தாக்­குபவவை


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

பொது­பல சேனா அமைப்பு இலங்­கையில் பெரும்­பான்மை இன­மாக பெளத்­தர்­களின் ஆதிக்­கத்தை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் தொடர்ந்தும் ஈடு­பட்டு வரு­வ­தாக அமெ­ரிக்க அறிக்­கை­யொன்று குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­களம்,சர்­வ­தேச சமய சுதந்­திரம் தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள  அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் சிவில் சமூக குழுக்­களின் கருத்­துப்­படி சமூக ஊட­கங்கள் சமய ரீதி­யான சிறு­பான்மை இனத்­தின்­மீது வெறுப்­பு­ணர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வதை இலக்­காகக் கொண்டு பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பத்­தி­ரிகை செய்­திகள் மற்றும் சிவில் சமூ­கத்தின் கருத்­துப்­படி பொது­பல சேனா போன்ற தேசிய அமைப்­புகள் பெரும்­பான்மை இன­மான பெளத்த மக்­களின் ஆதிக்­கத்தை மேம்­ப­டுத்தும் வகையில் சிறு­பான்மை இன மக்­களை ஏற்­றுக்­கொள்ள மறுத்து வரு­கின்­றன. குறிப்­பாக சமூக ஊட­கங்­களில் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூ­கங்­க­ளுக்கு எதி­ராக வெறுப்­பு­ணர்ச்­சியைத் தூண்டி விடு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­வ­தில்லை என சிவில் சமூக அமைப்­புகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளன எனவும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2020 மார்ச், ஜூன் மாதங்­க­ளுக்­கி­டையில் ஒன்­லைனில் (Online) வெளி­யான இனங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பு­ணர்ச்­சியைத் தூண்டும் வகை­யி­லான பேச்­சுக்­களில் (சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் மொழி­களில்)58 வீத­மா­னவை பல்­வேறு வகையில் முஸ்­லிம்­களை அல்­லது இஸ்­லாத்தைத் தாக்­கு­வ­தா­கவே அமைந்­துள்­ளன. அத்­தோடு 30 வீத­மா­னவை கிறிஸ்­த­வர்­க­ளையும் 5 வீத­மா­னவை தமி­ழர்கள் அல்­லது இந்து மதத்தைத் தாக்­கு­வ­தாக அமைந்­துள்­ளன.

2020 ஜன­வ­ரியில் முஸ்லிம் டாக்­ட­ரான சியாப்தீன் ஷாபி மீதான குற்­றச்­சாட்­டொன்று தொடர்பில் விசா­ர­ணை­யொன்று நடாத்­தப்­பட்­டது. டாக்டர் ஷாபி பல வரு­டங்­க­ளாக சிங்­கள பெண்­க­ளுக்கு பல­வந்­த­மாக கருத்­தடை (மல­டாக்கும்) அறுவைச் சிகிச்சை மேற்­கொண்டு வந்­தாக வைத்­தி­யத்­து­றையைச் சேர்ந்த 76 பணி­யா­ளர்கள் விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­ய­ம­ளித்­தனர். கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை குற்­றச்­சாட்டு தொடர்பில் ஆரா­யு­மாறு வைத்­திய நிபு­ண­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­போதும் 2019 முதல் அது நிலு­வை­யி­லேயே உள்­ளது. இது­வரை பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை.

அத்­தோடு டாக்டர் ஷாபி சந்­தே­கத்­துக்­கி­ட­மான வகையில் சட்­ட­வி­ரோ­த­மாக சொத்­துகள் திரட்­டி­ய­தாக கைது செய்­யப்­பட்டு 2019 இல் விடு­தலை செய்­யப்­பட்டார். சமூக ஊட­கங்கள் அவர் சிங்­கள பெண்­க­ளுக்கு கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்­ட­தாக குற்றம் சுமத்­தி­ய­தை­ய­டுத்து அவர் மீண்டும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். ஆனால் அவர்­மீது எந்­த­வொரு குற்­றத்­துக்கும் குற்­றப்­பத்­தி­ரிகை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. என்­றாலும் பொலி­ஸாரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க மஜிஸ்­திரேட் நீதிவான் வழக்­கினை 2021 மார்ச் மாதம் வரை தொடர்ந்தார்.

கொவிட் 19 தொற்று நோய் பரவல் தொடர்­பிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சமூக ஊட­கங்கள், தொலைக்­காட்சி மற்றும் அச்சு ஊட­கங்­களில் பிர­சாரம் செய்­யப்­ப­டு­வ­தாக முஸ்லிம் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் தக­வல்­க­ளின்­படி 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்­களில் முஸ்­லிம்கள் வேண்­டு­மென்றே கொவிட் 19 தொற்று நோயைப் பரப்­பு­வ­தாக சமூக ஊட­கங்­களில் பொய் குற்­றச்­சாட்­டுகள் முன் வைக்­கப்­பட்­டன. அதனால் முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்தை பகிஷ்­க­ரிக்­கும்­ப­டியும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. இதனை அதி­கா­ரிகள் மறுக்­க­வு­மில்லை.

கொவிட் 19 வைரஸ் தொற்று காலத்தில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக தொடர்ந்து விஷ­மி­களால் வெறுப்­பு­ணர்வு தூண்­டப்­ப­டு­வ­தாக பதில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் புகார் செய்­யப்­பட்­டது. ஏப்ரல் 12 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் உட்­பட பல முஸ்லிம் அமைப்­புகள் மற்றும் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் என்­பன பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்­தன. கடி­தத்தில் இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கும்­ப­டியும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன.

அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் அறிக்­கை­யின்­படி 2020 நவம்பர் 10 ஆம் திகதி அர­சாங்கம் கொவிட் 19 தொற்­று­நோயால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிப்­பது தொடர்பில் அவ­தானம் செலுத்­தி­யி­ருந்த நிலையில், பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர், வஹாப்­வா­திகள் சமூ­கத்­துக்குள் ஊடு­ரு­வு­வ­தாக ஊட­கங்­களில் பிரசாரம் செய்தார்.

இனம் மற்றும் சமய ரீதி­யி­லான சிறு­பான்மை மக்கள் கெள­ர­வப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அவர்­களை சமா­தா­னப்­ப­டுத்தி ஒரு­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என அமெ­ரிக்­காவின் இலங்­கைக்­கான தூதுவர் அலைனா பி டெப் லிட்ஸ் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்­காவின் இலங்­கைக்­கான தூதுவர் மற்றும் தூது­வ­ரா­லய அதி­கா­ரிகள், ஜனா­தி­பதி, பிர­தமர், மற்றும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli

2 comments:

  1. உண்மையை மறைக்க முடியாது

    ReplyDelete
  2. Case against Dr. Shafi

    According to para 6, last sentence, the case against Dr. Shafi was followed till Mar. 2021, which is incorrect. In fact, it does not appear that there was any case heard against Dr. Shafi on Mar. 2021.

    There was to be a Hearing on 17th Mar. 2020 on a case against him for which he was originally arrested on the ground of amassing unaccounted wealth. But what happened to this case on Mar. 2020 does not appear to have been reported by the Media.

    The other case against him on the alleged Sterilsation of 862 Sinhala women, was taken up in the Kurunegala Magistrate's Court on Dec.11, 2020 and was postponed to June 18, 2021. It appears that Dr. Shafi was not present in Court when the case was taken up due to the Corona Pandemic.

    ReplyDelete

Powered by Blogger.