Header Ads



சுயபரிசோதனை செய்ய, இதோ இலகுவான வழி - அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை


கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதென, அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

எனவே ஆரம்பத்திலேயே கொரோனா, தொற்றைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றார்.

இதற்காக தம்மால் முடிந்த சுயபரிசோதனைகளை செய்துகொண்டு, ஆரம்பத்திலேயே  வைத்தியசாலைக்குச் சென்றால், கொரோனா தொற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என்றார்.

முன்பு சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறி, தற்போது சோர்வை எதிர்நோக்கினால், ஒரே மூச்சில் 1- 10 வரை எண்ண முடியாவிட்டால், அல்லது  சில சொற்களை பேசும் போது சோர்வை உணர்தல் என்பன உங்களுக்கான சுயபரிசோதனை என தெரிவித்துள்ள அவர், தவிர இந்த பரிசோதனைகளுடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் விரைவாக வைத்திய ஆலோசனைப் பெறுவது சிறந்தது என்றார்.

No comments

Powered by Blogger.