Header Ads



அமைச்சர் ஒருவரின் ஹிட்லர் பற்றிய கருத்து, அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கருத்தில்லை – கெஹெலிய


இராஜாங்க அமைச்சர் ஒருவர் ஹிட்லர் குறித்து தெரிவித்த கருத்து அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கருத்தில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஹிட்லர் குறித்த கருத்து ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்து என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக கருதக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் தனிப்பட்ட கருத்துக்களை முக்கியமானதாக கருதக்கூடாது என தெரிவித்துள்ள அது தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் கருத்து அரசாங்கத்திற்கும் ஜேர்மனின் இராஜதந்திரிக்கும் இடையில் கருத்துவேறுபாட்டினை உருவாக்காது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Thinakkural

No comments

Powered by Blogger.