Header Ads



கிரிக்கெட் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேக்கு 8 ஆண்டுகள் தடை


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கையின் கிரிக்கட் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேக்கு அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து எட்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லொக்குஹெட்டிகிற்கான தடை ஏப்ரல் 3, 2019 இல் இருந்து அமுலுக்கு வருகிறது.

ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளன ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தினால், குற்றவாளி எனக் கண்டறிந்ததையடுத்து, இலங்கையின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே அனைத்து கிரிக்கெட்டிலும் தடை செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் விதிகளை மீறிய மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தில்ஹார மீது குற்றம் சுமத்தப்பட்டு அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.