Header Ads



24 மணி நேரத்தில் 1111 கொரோனா தொற்றாளர்கள் பதிவு (மாவட்ட விபரங்கள் இணைப்பு)


இன்று (28) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,111 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் நாட்டில் அதிகளவில் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இது கருதப்படுகின்றது.

குறித்த தொற்றாளர்களில் 15 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

உள்நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 200 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 198 நபர்களுக்கும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் பதுளை மாவட்டத்தில் 20 பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் 17 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 28 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் மூவருக்கும் கண்டி மாவட்டத்தில் 74 பேருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 55 பேருக்கும் புத்தளம் மாவட்டத்தில் 08 நபர்களுக்கும் யாழ். மாவட்டத்தில் 09 பேருக்கும் மாத்தளை மாவட்டத்தில் 32 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 நபர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பகுதியில் ஐவர், பம்பலப்பிட்டி பகுதியில் இருவர், பொரளை பகுதியில் இருவர், மருதானை பிரதேசத்தில் ஒருவர், மட்டக்குளி பகுதியில் ஒருவர், வெள்ளவத்தை பகுதியில் 08 பேர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 200 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

No comments

Powered by Blogger.