Header Ads



யாழ்ப்பாணத்தில் அதிபர், ஆசிரியர் உட்பட 12 பேருக்கு கொரோனா - மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்


யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும், முல்லைத்தீவில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவர்களில் இருவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரும், ஆசிரியரும் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பனவற்றில் நேற்று 668 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போதே 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 6  பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.

மேலும் ஒருவர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் பணியாற்றுபவர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரும் சுய தனிமைப் படுத்தப்பட்டவர்கள் என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். Thinakkural


No comments

Powered by Blogger.