Header Ads



புர்கா தடை குறித்து, நாளை அமைச்சரவை ஆராயுமா..? உறுதி செய்ய முடியாதென்கிறார் அமைச்சர்



நாளைய -15- அமைச்சரவை கூட்டத்தில் புர்கா மீதான தடை குறித்து விவாதிக்கப்படுமா என்பதை உறுதி செய்ய முடியாது என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டுள்ளதை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் புர்காவை தீவிரவாதத்தின் அடையாளமாகவே கருதுகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் தினக்குரல்

No comments

Powered by Blogger.