Header Ads



தாக்குதலொன்று இடம்பெறலாம் என, எனது பாதுகாப்பு உத்தியோகத்தர் முன்கூட்டியே எச்சரித்தார்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தாக்குதலொன்று இடம்பெறலாம் என தனது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் முன்கூட்டியே எச்சரித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்று மூன்று நாட்களின் பி;ன்னர் ஏப்பிரல்24 ம் திகதி நான் இது குறித்து நாடாளுமன்றில் தெரிவித்தேன் என  அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என தெரிவித்துள்ள குமார்வெல்கம தங்களிற்கு முன்கூட்டிய எச்சரிக்கை கிடைக்கவில்லை என எவரும் தெரிவி;க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். தினக்குரல்

No comments

Powered by Blogger.